search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழை மாணவர்கள்"

    சத்துணவு திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். என்று நூல் வெளியீட்டு விழாவில் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசினார்.
    சென்னை:

    வண்டலூர் தலைநகர் தமிழ் சங்கத்தில் நடந்த ஐ.ஆறுமுகம் எழுதிய ‘திருமுறை அமிழ்தம்’ நூலை வெளியீட்டு திரைப்பட இயக்குனரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் பேசியதாவது:-

    கடலானது கதிரவனின் வெப்பம் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டு தான் பொங்கும். அது போல் கடலால் சுற்றி வளைக்கப்பட்ட பரந்த உலகில் வாழும் மக்கள் இன்சொற்களுக்கன்றி சுடும் சொற்களைக் கேட்டு மகிழமாட்டார்கள்.

    பசி நினைத்தால் மனிதன் ஒருவனை மிருக மாக்க முடியும். ஒரு மிருகத்தைத் தாலாட்டித் தூங்க வைக்கவும் முடியும். பசிக்காகப் பள்ளிக்கு வந்தவர்கள் பின்பு பதவிகளால் இளைப்பாற் வைத்து மகத்தான மாற்றத்தை சாமானியர்களிடம் ஏற்படுத்தியது சத்துணவுத் திட்டம். இந்த திட்டத்தைப் பிரசவித்தவர் காமராஜர், சீராட்டி வளர்த்தவர் எம்.ஜி.ஆர். இந்த மகத்தான மனிதர்களின் கருணையால் தான் அரை நூற்றாண்டுத்தமிழர்கள் ரத்த சோகையை வென்று சத்துணவில் வாகை சூடினார்கள்.

    தமிழ் உரை நடையின் பிரசவ வடிவத்தை சிலப்பதிகாரத்திலும், கவிதை வடிவின் நீரோட்டத்தை கம்பராமயாணத்திலும் காணலாம். மொட்டாக இருந்த திருக்குறளை மலரவைத்து, மனம் பறப்ப வைத்தது பரிமேலழகரின் உரைநடையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். தமிழக கல்வித்திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார்படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். ‘நீட்’ தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவு.

    அது மட்டுமல்ல முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம் பெற முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. ‘நீட்’ தேர்வு முறையில் நடைபெற்ற குளறுபடிகளே இதற்கு காரணம்.

    தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரையுள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். மேலும் தமிழக கல்வித் திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார் படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×